1330 Thirukkural to be filmed! Movie Audio and Trailer Launch happened recently in Chennai. வரலாற்று நிகழ்வாக இசைஞானி இளையராஜா இசையில் ‘திருக்குறள்’ திரைப்படம் “திருக்குறள்” படத்திற்கு பாடல்கள் எழுதி இசையமைக்கும் இசைஞானி இளையராஜா.
இம்மாதம் 27 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா, படக்குழுவினருடன், திரை பிரபலஙகள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
பெருந்தலைவர் காமராஜர் வாழ்க்கை வரலாற்றை ‘காமராஜ்’ என்ற பெயரில் திரைப்படமாகத் தயாரித்த ‘ரமணா கம்யூனிகேஷன்ஸ்’ நிறுவனம், தற்போது மிகப் பிரம்மாண்டமாகத் ‘திருக்குறள்’ என்ற திரைப்படத்தைத் தயாரித்துள்ளது. அறம் சார் வாழ்வியலை மானுடர்க்கு போதிப்பதில் உலகில் முன்னிலை வகிக்கும் நூல் திருக்குறள். திருக்குறளின் முப்பாலை மையக் கருவாகக் கொண்டு, இப்படத்திற்கான திரைக்கதை எழுதப்பட்டுள்ளது.
காதலோடு, வீரமும் தமிழர் வாழ்வில் பிரிக்க முடியாத ஒன்றாகும். அன்றைய தமிழரின் வீரத்தைப் பறைசாற்றும் போர்க்களக் காட்சிகளும் மிகுந்த பொருட்செலவில் படமாக்கப்பட்டுள்ளன.


இயக்குனர் ஏ.ஜெ.பாலகிருஷ்ணன் பேசுகையில்:
“அனைவருக்கும் வணக்கம், குரோசோவா சொல்லுவார் ஒரு மோசமான திரைக்கதையை கொண்டு போயிட்டு நல்ல படத்தை எடுக்க முடியாதுன்னு சொல்வார். இந்தப்படத்தின் திரைக்கதையை செம்பூர் ஜெயராஜ் தான் எழுதினார் அவர் தான் காமராஜ் படத்திற்கும் எழுதினார். அவர் ஒரு திராவிட இயக்க போராளி. இந்த படம் உருவான கதையை ரொம்ப சுருக்கமா சொல்லி விடுகிறேன். திருக்குறளை படமாக பண்ணுங்கன்னு ஒருத்தர் வேண்டுகொள் வைததார். எப்படி 1330 குறளை படமாக எடுக்க முடியும்னு யோசித்த போது எங்களுக்கு முன்னுதாரணமா இருந்து கலைஞருடைய குரலோவியம். எதை ஓவியமா பண்ண முடியுமோ? அவர் அதை புத்தகமா போட்டுட்டார். அதிலிருந்து நாங்க எதையெல்லாம் காட்சிப்படுத்த முடியுமோ? அந்த குறள்கள் எல்லாம் எடுத்துக்கிட்டோம். இந்த படத்துக்கான பணம் அது அதன் போக்குல வந்தது. இதுல எந்த சிரமமுமே எனக்கு இல்லை. வாழ்க்கையில பல விஷயங்கள் அதன் போக்குல தான் அதுவாக நிகழும். படம் செட் போட்டோம் அந்த நாள் முழுக்க மழை, செட் முழுக்க மழை, இடும்பைக்கு இடும்பை குறள் தான் ஞாபகம் வந்தது. அதைத்தாண்டி படம் முடித்தோம். அப்புறம் இளையராஜா சார் கிட்ட போனோம். படத்தை பார்த்து அவருக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. அற்புதமான இசையை தந்தார். இந்த படம் உருவாக ரெண்டு பேர் முக்கியமான காரணம், விஐபி விஸ்வநாதன் ஐயா வந்து ரொம்ப சிக்கனமான மனிதர் அவர் இதுக்கு உதவி செய்தார். மதுரை டி. பிபி ராஜேந்திரன் உதவி செய்தார். இருவருக்கும் நன்றிகள். தனலட்சுமி வாசுகியா நடித்துள்ள பெண், அவருக்கு முதல் படம், அவங்க வாழ்க்கையில முன்னுக்கு வரணும். இந்த துறையில ஜொலிக்கணும். கலைச்சோழன் நான் பேச வேண்டியதை பேசி விட்டார்: நன்றாக நடித்துள்ளார். அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.” என்றார்.

“1330 குறளை படமாக எடுக்க முடியும்னு யோசித்த போது எங்களுக்கு முன்னுதாரணமா இருந்து கலைஞருடைய குரலோவியம்”…
– Director Balakrishnan speech
“இந்த படத்தை ஒரு காவியமா தான் பார்க்கிறேன்”
– Actor Guna Babu speech

மேடையில் அமர்ந்திருக்கும் பெரியோர்கள் அனைவருக்கும் என்னுடைய சிறந்தாழ்ந்த வணக்கங்கள் நன்றிகள் இந்த விழாவை சிறப்பிக்க வந்த உங்கள் எல்லாருக்கும் எங்கள் குழுவின் சார்பாக இதயம் கலந்த நன்றிகள்
நடிகர் குணா பாபு பேசுகையில்:
திருக்குறள் படத்தைப் பற்றி சொல்லனும்னா, நான் வந்து இந்த படத்தை ஒரு காவியமா தான் பார்க்கிறேன் திருவள்ளுவரை நாம புத்தகத்தில் படித்திருப்போம், கேள்விப்பட்டிருப்போம் ஆனால் அவருடைய வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் அவருடைய வாழ்வியல் முறை எப்படி இருந்திருக்கும் மக்களோடு எப்படி பழகிருப்பாரு, அவருடைய காலகட்டங்களில் என்ன சொல்ல வந்தாங்க அவங்க திருக்குறளை வந்து எப்படி அரங்கேற்றம் பண்ணாங்க நான் இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் படமா பார்க்கும்போது உண்மையிலேயே பிரம்மிப்பாவும் ரொம்ப மென்மையாகவும் அன்போடவும் அழகா இருந்துச்சு இதை நீங்களும் அனுபவிக்கனும் சோ கண்டிப்பா எல்லாரும் தியேட்டர் வந்து படம் பாக்கணும்னு என்னுடைய ஆசை விருப்பம் உங்கள் நண்பர்களுக்கும் சொல்லுங்க உங்க உறவினர்களுக்கும் சொல்லுங்க இது உலகம் ஃபுல்லா கொண்டு போய் சேர்க்க வேண்டிய படம் தமிழர்கள் அனைவரும் கண்டிப்பா ஒருமுறையாவது இந்த படத்தை பாக்கணும் தமிழர்கள் மட்டும் இல்லாமல் திருக்குறளையும் திருவள்ளுவரையும் தெரிஞ்ச அனைவருமே ஒரு முறையாவது இந்த படத்தை பார்க்கணும் என்று ஆசை, வேண்டுகோள் மிக்க நன்றி.

படைப்பினூடாக படைப்பாளியைக் கண்டடையும் முயற்சியில் திருவள்ளுவரும் இப்படத்தில் ஒரு பாத்திரமாக வருகிறார். கூடவே வாசுகியும், அதோடு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழரின் வாழ்வியலும் இத்திரைப்படத்தில் முக்கிய அங்கம் வகிக்கிறது. காதலோடு, வீரமும் தமிழர் வாழ்வில் பிரிக்க முடியாத ஒன்றாகும். அன்றைய தமிழரின் வீரத்தைப் பறைசாற்றும் போர்க்களக் காட்சிகளும் மிகுந்த பொருட்செலவில் படமாக்கப்பட்டுள்ளன.
இத்திரைப்படத்தைப் பார்த்த இசைஞானி இளையராஜா, உடனடியாக இசையமைக்க இசைவு தெரிவித்தார். அத்துடன் இப்படத்திற்காக, சங்க இலக்கியச் சொற்களோடு, கவித்துவமும், பொருட்செறிவும் மிக்க இரு பாடல்களையும் எழுதியுள்ளார். முத்தமிழில், முதல் தமிழுக்கான உயரிய படைப்பிற்கு, இரண்டாம் தமிழின் அரியணையில் வீற்றிருக்கும் இசைஞானி இசையமைப்பது, இத்தனை ஆண்டுகால தமிழுக்கான வரலாற்றில் ஒரு அற்புத நிகழ்வாகும். ஜி.யூ.போப் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த பின்பு தான், திருக்குறள் உலக அளவில் அறிஞர்களின் கவனத்தை ஈர்த்தது. அதுபோல் இந்நிகழ்விற்குப் பின் சர்வதேச அளவில் உலக மக்களின் கவனத்தையும் நிச்சயம் இந்த திருக்குறள் படம் ஈர்க்கும்.

இப்படத்தில் வள்ளுவராக கலைச்சோழன், வாசுகியாக தனலட்சுமி, பாண்டிய மன்னனாக ஓ.ஏ.கே.சுந்தர், நக்கீரராக இயக்குநர் சுப்ரமணிய சிவா, புலவர் பெருந்தலைச்சாத்தனாக கொட்டாச்சி ஆகியோரோடு, குணாபாபு, பாடினி குமார் மற்றும் முக்கிய நடிக, நடிகையர் பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் கலை இயக்குநராக சுரேஷ் கலேரியும், ஆடைவடிவமைப்பாளராக சுரேஷ் குமாரும் பணியாற்றியுள்ளனர். செம்பூர். கே. ஜெயராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுத எட்வின் சகாய் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

துன்பத்திற்கே துன்பம் கொடுக்கணும்! Actress Dhanalakshmi speech
தமிழ் பேசுற நடிகை நான்! – Actress Padine Kumar speech

இத்திருப்பணியில் மதுரை டி.பி.ராஜேந்திரன் முதன்மைப் பங்களிப்புச் செய்துள்ளார். வி.ஐ.டி.வேந்தர் கோ.விஸ்வநாதன் தலைமையிலான தமிழியக்கமும் இப்பணியில் இணைந்துள்ளது. ரமணா கம்யூனிகேஷன்ஸ் இத்திரைப்படத்தைத் தயாரித்துள்ளது.